* மாவட்டம் : கன்னியாகுமரி
* இடம் : கொட்டார்
* முகவரி : கொட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி.
* தாலுகா : நாகர்கோவில்
வரலாறு :
புனித சவேரியார் கோவாவிலிருந்து தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இறைப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ இறைப்பணியாளர். எப்போதும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறுக்கு வரத் தவறியதில்லை. அவர் கோட்டாறில் தங்கும் காலங்களில் புனித மேரி ஆலயம் சென்று வழிபடுவது வழக்கம். கோட்டாறு மக்கள் மத்தியில் வலிய பண்டாரம் என்றே அறியப்பட்டிருந்தார். வேணாட்டு மக்களான படகர்கள் படையெடுப்பு நிகழ்த்தியபோது அதைத் தடுத்து நிறுத்திய பெருமையில் மகிழ்ந்த மன்னர் பாராட்டிய கையோடு சவேரியாருடன் நெருங்கிப் பழகினார். இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக கோட்டாறில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். இரண்டு முறைகளுக்கு மேல் புதுப்பிக்கப்பட்ட இந்தத் தேவாலயம் புனித சவேரியாரின் பெருந்தொண்டை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தேவாலய வளாகத்திற்குள் புனித அன்னை தேவாலயமும் உள்ளது.
கருத்துகள் இல்லை