பெண்கள் தங்கள் குடும்பத்தினரின்(புகுந்த வீடு மற்றும் பிறந்த வீடு) வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்கும் சட்டம் இது.


                 பெண்களுக்கு, கணவர் வீட்டில் வாழும் உரிமையை இச்சட்டம் நிலைநாட்டுகிறது. கணவரின் குடும்பம், பெண்ணை வாழ அனுமதிக்காத பட்சத்தில் பண உதவி, பாதுகாப்பான புகலிடம், மருத்துவ மற்றும் சட்ட சேவைகளை ஈடாக அளிக்க வகை செய்கிறது.


                பெண்களுக்கு உடல், மனம், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்களையும், வரதட்சணை மற்றும் சொத்து தொடர்பாக இழைக்கப்படும் கொடுமைகளையும் சரியாக வரையறுத்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வு காண குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்(2005) உதவுகிறது.


                மேலும், காதல் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.


                இச்சட்டத்தின் படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவையில்லை. மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவு செய்யப்பட்டு, அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையாக ஒரு வருட சிறை வாசமும்,10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


                பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக புகார் கொடுக்க காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005 (Prevention of Domestic Violence Act, 2005)

                 பெண்கள் தங்கள் குடும்பத்தினரின்(புகுந்த வீடு மற்றும் பிறந்த வீடு) வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்கும் சட்டம் இது.


                 பெண்களுக்கு, கணவர் வீட்டில் வாழும் உரிமையை இச்சட்டம் நிலைநாட்டுகிறது. கணவரின் குடும்பம், பெண்ணை வாழ அனுமதிக்காத பட்சத்தில் பண உதவி, பாதுகாப்பான புகலிடம், மருத்துவ மற்றும் சட்ட சேவைகளை ஈடாக அளிக்க வகை செய்கிறது.


                பெண்களுக்கு உடல், மனம், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்களையும், வரதட்சணை மற்றும் சொத்து தொடர்பாக இழைக்கப்படும் கொடுமைகளையும் சரியாக வரையறுத்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வு காண குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்(2005) உதவுகிறது.


                மேலும், காதல் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.


                இச்சட்டத்தின் படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவையில்லை. மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவு செய்யப்பட்டு, அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையாக ஒரு வருட சிறை வாசமும்,10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


                பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக புகார் கொடுக்க காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை