* மரத்தின் பெயர் : கத்தி சவுக்கு மரம்

            * தாவரவியல் பெயர் : அகேசியா ஆரிகுளிபார்மிஸ்

            * ஆங்கில பெயர் : Auri, Earleaf acacia, Earpod wattle, Northern black wattle, Papuan wattle

            * தாயகம் : ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா

            * மண் வகை : செம்மண், களிமண் மற்றும் மணற்பாங்கான மண்ணில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : பபேசியே

            * மற்ற பெயர்கள் : கத்தி கருவேல்


பொதுப்பண்புகள் :

            * கத்தி சவுக்கு மரம் மலைப்பாங்கான நிலத்தில் வளரும் தன்மை உடையது.


            * மண்ணின் கார அமிலதன்மை 6-7க்குள் இருந்தால் நன்கு வளரும்.


            * மரம் காப்பிதூள் நிறத்தில் இருக்கும். வனப்பகுதியில் இந்த மரத்தினை அதிகம் காணலாம்.


            * சராசரியாக 10-15மீ உயரம் வளரக்கூடிய மரம்.


             * இதனுடைய இலைகள் கத்தி போன்ற வடிவம் உடையது. அதனால் தான் கத்தி சவுக்கு என்று அழைக்கப்படுகிறது.


             * இந்த மரம் தனது வாழ்நாளில் 60 செ.மீ சுற்றளவு வரை வளரும் இயல்பினை உடையது.


             * இந்த மரத்தின் மலர்கள் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் 4 மி.மீ நீளம் உடைய மலர்கள்.


             * காய்ந்த காய்களின் நெற்று சுறுள் அமைப்பில் 1.2 செ.மீ அகலத்தில் மரத்தினுடைய நிறத்தில் இருக்கும்.


பயன்கள் :

            * சவுக்கு மரம் ஒரு சிறந்த எரிபொருளாகும்.


            * மரம் காரிக்கட்டைத் தாயாரிப்பில் சிறந்து விளங்குகிறது.


            * இந்த மரம் மரச்சாமான்கள் செய்ய பயன்படுகின்றது.


            * இம்மரம் காகித கூழ் தயாரிக்க ஏற்றதாகும்.


வளர்ப்பு முறைகள் :

            * கத்தி சவுக்கு மரத்தை சாகுபடி செய்ய தேர்வு செய்யும் நிலத்தை கோடை உழவு செய்து குறைந்தது ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது.


            * பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தை இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும்.


            * சவுக்கு ரக மரவகைகள் குறைவான நீரிலேயே நன்கு வளரும் தன்மை கொண்டவை.


            * மூன்று ஆண்டுகளில் 4 x 4 அடி இடைவெளி அல்லது 5 x 5 இடைவெளியில் நடுவதன் மூலம் ஒரு ஹெக்டருக்கு 125 முதல் 150 டன் மரம் பெறலாம்.


நோய் தடுக்கும் முறைகள் :

            * நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் களை எடுப்பது அவசியமாகிறது. அதன் பிறகு மரத்திலிருந்து விழும் இலைகள், குச்சிகள், மூடாக்காக அமையும். இதனால் களைகள் முளைப்பது இல்லை.


            * தண்டு துளைப்பான் துளையிட்டப் பகுதிகளில் வேப்ப எண்ணெய் சிரஞ்சியின் மூலம் செழுத்தி துளையினை ஈர மண்ணைக் கொண்டு அடைக்க வேன்டும்.


            * மரத்தின் விளைச்சலை சிறந்த நீர் நிர்வாகம், உர நிர்வாகம் மூலம் மேம்படுத்தலாம்.


            * சொட்டு நீர் பசனம் சிறந்ததொரு முறையாகும். இதனால் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.

கத்தி சவுக்கு மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

            * மரத்தின் பெயர் : கத்தி சவுக்கு மரம்

            * தாவரவியல் பெயர் : அகேசியா ஆரிகுளிபார்மிஸ்

            * ஆங்கில பெயர் : Auri, Earleaf acacia, Earpod wattle, Northern black wattle, Papuan wattle

            * தாயகம் : ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா

            * மண் வகை : செம்மண், களிமண் மற்றும் மணற்பாங்கான மண்ணில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : பபேசியே

            * மற்ற பெயர்கள் : கத்தி கருவேல்


பொதுப்பண்புகள் :

            * கத்தி சவுக்கு மரம் மலைப்பாங்கான நிலத்தில் வளரும் தன்மை உடையது.


            * மண்ணின் கார அமிலதன்மை 6-7க்குள் இருந்தால் நன்கு வளரும்.


            * மரம் காப்பிதூள் நிறத்தில் இருக்கும். வனப்பகுதியில் இந்த மரத்தினை அதிகம் காணலாம்.


            * சராசரியாக 10-15மீ உயரம் வளரக்கூடிய மரம்.


             * இதனுடைய இலைகள் கத்தி போன்ற வடிவம் உடையது. அதனால் தான் கத்தி சவுக்கு என்று அழைக்கப்படுகிறது.


             * இந்த மரம் தனது வாழ்நாளில் 60 செ.மீ சுற்றளவு வரை வளரும் இயல்பினை உடையது.


             * இந்த மரத்தின் மலர்கள் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் 4 மி.மீ நீளம் உடைய மலர்கள்.


             * காய்ந்த காய்களின் நெற்று சுறுள் அமைப்பில் 1.2 செ.மீ அகலத்தில் மரத்தினுடைய நிறத்தில் இருக்கும்.


பயன்கள் :

            * சவுக்கு மரம் ஒரு சிறந்த எரிபொருளாகும்.


            * மரம் காரிக்கட்டைத் தாயாரிப்பில் சிறந்து விளங்குகிறது.


            * இந்த மரம் மரச்சாமான்கள் செய்ய பயன்படுகின்றது.


            * இம்மரம் காகித கூழ் தயாரிக்க ஏற்றதாகும்.


வளர்ப்பு முறைகள் :

            * கத்தி சவுக்கு மரத்தை சாகுபடி செய்ய தேர்வு செய்யும் நிலத்தை கோடை உழவு செய்து குறைந்தது ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். இவ்வாறு செய்வதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது.


            * பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தை இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும்.


            * சவுக்கு ரக மரவகைகள் குறைவான நீரிலேயே நன்கு வளரும் தன்மை கொண்டவை.


            * மூன்று ஆண்டுகளில் 4 x 4 அடி இடைவெளி அல்லது 5 x 5 இடைவெளியில் நடுவதன் மூலம் ஒரு ஹெக்டருக்கு 125 முதல் 150 டன் மரம் பெறலாம்.


நோய் தடுக்கும் முறைகள் :

            * நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் களை எடுப்பது அவசியமாகிறது. அதன் பிறகு மரத்திலிருந்து விழும் இலைகள், குச்சிகள், மூடாக்காக அமையும். இதனால் களைகள் முளைப்பது இல்லை.


            * தண்டு துளைப்பான் துளையிட்டப் பகுதிகளில் வேப்ப எண்ணெய் சிரஞ்சியின் மூலம் செழுத்தி துளையினை ஈர மண்ணைக் கொண்டு அடைக்க வேன்டும்.


            * மரத்தின் விளைச்சலை சிறந்த நீர் நிர்வாகம், உர நிர்வாகம் மூலம் மேம்படுத்தலாம்.


            * சொட்டு நீர் பசனம் சிறந்ததொரு முறையாகும். இதனால் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை