* மரங்களை வளர்த்து, ஊடுபயிராக குறுகிய கால பயிர்களை பயிரிடுவதால், விவசாயிகள் லாபம் பார்க்கலாம். விவசாயத்தைப் பொருத்தவரை, நெல், வேர்க்கடலை ஆகிய குறுகிய கால பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
* நெல்லிக்காய், தென்னை, மா, பலா, வாழை ஆகிய, ஆண்டுதோறும் லாபம் கிடைக்கும் மரப்பயிர்களையும், விவசாயிகள் பயிரிடுகின்றனர். சில விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை, ஆடு, மாடு, கோழி, தீவனம் என ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையமாக செய்து, கணிசமான லாபத்தை ஈட்டுகின்றனர்.
* இயற்கை மற்றும் பசுமை ஆர்வலர்கள் சிலர், நீண்ட காலத்திற்கு பின் லாபம் தரும் தேக்கு, வேங்கை, சந்தனம், செஞ்சந்தனம், மகாமேரு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து, லாபம் பார்க்க துவங்கியுள்ளனர். லாபம் அளிக்கும் மரங்கள் வளர்ப்பிற்கு இடையே வேர்க்கடலை, காய்கறி பயிர்களை பயிரிட்டு, கூடுதல் லாபம் பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை