முகவரி

                  ஸ்ரீரங்கப்பட்டணம்,மண்டியா, கர்நாடகம்


வரலாறு

                   தாரியா தௌலத் பாக் என்பது திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை ஆகும். இது மைசூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1784 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதனைத் திப்பு சுல்தானின் தந்தையான ஐதர் அலி கட்டுவிக்கத் தொடங்கினார் எனினும் திப்பு சுல்தானே அதனைக் கட்டி முடித்தார். காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை அழகிய பூங்கா ஒன்றின் மத்தியில் அமைந்துள்ளது.


                   1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அரண்மனையைப் பிரித்தானியத் தளபதி கேணல் வெல்லெசுலி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தினார். 1959 ஆம் ஆண்டில் இது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் ஒரு பகுதியில் திப்பு சுல்தான் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.


                   ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக செல்லும் எல்லா சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நினைவுச்சின்னம் இது.தரியா தௌலத் பாக் இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை பாணியில் அழகான நுணுக்கமான ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


                   வண்ண ஓவியங்கள், வார்ப்பு ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்ற பலவிதமான ஓவிய வடிவங்கள் மற்றும் திப்பு சுல்தான் பயன்படுத்திய அற்புதமான துணிவகைகள் போன்றவற்றை இந்த அரண்மனையின் முதல் தளத்தில் பயணிகள் பார்க்கலாம். தரைத்தளத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போர் சம்பவங்கள் சுவர் ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

தாரியா தௌலத் பாக் அரண்மனை சுற்றுலா தலம்

முகவரி

                  ஸ்ரீரங்கப்பட்டணம்,மண்டியா, கர்நாடகம்


வரலாறு

                   தாரியா தௌலத் பாக் என்பது திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை ஆகும். இது மைசூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1784 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதனைத் திப்பு சுல்தானின் தந்தையான ஐதர் அலி கட்டுவிக்கத் தொடங்கினார் எனினும் திப்பு சுல்தானே அதனைக் கட்டி முடித்தார். காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் இந்திய-சரசனியக் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை அழகிய பூங்கா ஒன்றின் மத்தியில் அமைந்துள்ளது.


                   1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அரண்மனையைப் பிரித்தானியத் தளபதி கேணல் வெல்லெசுலி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தினார். 1959 ஆம் ஆண்டில் இது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் ஒரு பகுதியில் திப்பு சுல்தான் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.


                   ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக செல்லும் எல்லா சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நினைவுச்சின்னம் இது.தரியா தௌலத் பாக் இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை பாணியில் அழகான நுணுக்கமான ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


                   வண்ண ஓவியங்கள், வார்ப்பு ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்ற பலவிதமான ஓவிய வடிவங்கள் மற்றும் திப்பு சுல்தான் பயன்படுத்திய அற்புதமான துணிவகைகள் போன்றவற்றை இந்த அரண்மனையின் முதல் தளத்தில் பயணிகள் பார்க்கலாம். தரைத்தளத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போர் சம்பவங்கள் சுவர் ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை