முகவரி

                   ஸ்ரீரங்கப்பட்டணா, மண்டியா, கர்நாடகம்

வரலாறு

                    ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

                      1940 ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதிக்கு ஜுன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது உகந்தது.இந்த சரணாலயத்தில் பல பிரசித்தமான புலம் பெயர் பறவைகளான கூழைக்கடா (பெரிய வகைக்கொக்கு) செங்கால் நாரை போன்றவை வாழ்கின்றன.

                     இவை தவிர அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கொக்கு, நீர்க்காகம், கௌதாரி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. படகுச்சவாரி செல்வதன் மூலம் கொக்கு, கரண்டி வாயன், நாரை போன்றவற்றை பார்க்கலாம். பயணிகள் இந்தச் சரணாலயத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்க்கலாம். இந்தியப் பயணிகளிடம் 50 ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளிடம் 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் படகுச்சவாரி செல்வதற்கும் அதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலம்

முகவரி

                   ஸ்ரீரங்கப்பட்டணா, மண்டியா, கர்நாடகம்

வரலாறு

                    ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ரங்கணாத்திட்டு பறவைகள் சரணாலயம் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும். ஆறு தீவுத்திட்டுகளை உள்ளடக்கிய இந்த சரணாலயம் 67 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

                      1940 ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதிக்கு ஜுன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது உகந்தது.இந்த சரணாலயத்தில் பல பிரசித்தமான புலம் பெயர் பறவைகளான கூழைக்கடா (பெரிய வகைக்கொக்கு) செங்கால் நாரை போன்றவை வாழ்கின்றன.

                     இவை தவிர அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், கொக்கு, நீர்க்காகம், கௌதாரி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. படகுச்சவாரி செல்வதன் மூலம் கொக்கு, கரண்டி வாயன், நாரை போன்றவற்றை பார்க்கலாம். பயணிகள் இந்தச் சரணாலயத்தை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்க்கலாம். இந்தியப் பயணிகளிடம் 50 ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளிடம் 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் படகுச்சவாரி செல்வதற்கும் அதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை