முகவரி

                  அகும்பே, ஷிமோகா, கர்நாடகம்


வரலாறு

                  இந்தியாவிலுள்ள உயரமான பத்து அருவிகளுள் ஒன்றாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. இது சீதா ஆற்றினால் உருவாக்கப்படுகிறது.


                  பர்கானா அருவியின் உயரம் 850 அடி ஆகும். இதன் பெயரிலுள்ள 'பர்கா' என்ற வார்த்தை, இப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் புலுட்டுமான் எனும் மான் வகையை குறிக்கிறது.கர்நாடக மாநிலத்தின் முதன்மை நீர்மின் உற்பத்தித் திட்டத்துக்கு இந்த அருவியே மூலவளமாக உள்ளது.


                  சுற்றுலாப் பயணிகள் பர்கானா அருவியை அடைவதற்கு மேற்கு தொடர்ச்சி மலையின் செங்குத்தான சரிவுகளில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் . மேலும், மோட்டார் பைக் மூலமாக பர்கானாவை அடைய விரும்பும் பயணிகளுக்கென்றே தனி வழித்தடமும் இருக்கின்றது.


                  இந்த அருவியை சுற்றிப் பார்க்க பயணிகள் பனிக் காலத்தின் தொடக்கத்தில் வருவது சிறப்பாக இருக்கும். இதன் அருகில் உள்ள பர்கானா காட்சிக் கோண பகுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளையும், குன்றுகளின் அழகிய சரிவுகளையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.


                  அதோடு அருவியை சூழ்ந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளும், அந்த காட்டை நிறைத்து கொண்டு நிற்கும் மூங்கில் மரங்களும், இன்னபிற மூலிகைகளும் கண்கொள்ளா காட்சிகளாகும். இதுதவிர இந்தப் பகுதிகளில் 7 வருடத்துக்கு ஒருமுறை தழைத்தோங்கும் குருஜி செடி மிகவும் பிரபலம்.

பர்க்கானா நீர்விழ்ச்சி சுற்றுலா தலம்

முகவரி

                  அகும்பே, ஷிமோகா, கர்நாடகம்


வரலாறு

                  இந்தியாவிலுள்ள உயரமான பத்து அருவிகளுள் ஒன்றாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. இது சீதா ஆற்றினால் உருவாக்கப்படுகிறது.


                  பர்கானா அருவியின் உயரம் 850 அடி ஆகும். இதன் பெயரிலுள்ள 'பர்கா' என்ற வார்த்தை, இப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் புலுட்டுமான் எனும் மான் வகையை குறிக்கிறது.கர்நாடக மாநிலத்தின் முதன்மை நீர்மின் உற்பத்தித் திட்டத்துக்கு இந்த அருவியே மூலவளமாக உள்ளது.


                  சுற்றுலாப் பயணிகள் பர்கானா அருவியை அடைவதற்கு மேற்கு தொடர்ச்சி மலையின் செங்குத்தான சரிவுகளில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் . மேலும், மோட்டார் பைக் மூலமாக பர்கானாவை அடைய விரும்பும் பயணிகளுக்கென்றே தனி வழித்தடமும் இருக்கின்றது.


                  இந்த அருவியை சுற்றிப் பார்க்க பயணிகள் பனிக் காலத்தின் தொடக்கத்தில் வருவது சிறப்பாக இருக்கும். இதன் அருகில் உள்ள பர்கானா காட்சிக் கோண பகுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளையும், குன்றுகளின் அழகிய சரிவுகளையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.


                  அதோடு அருவியை சூழ்ந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளும், அந்த காட்டை நிறைத்து கொண்டு நிற்கும் மூங்கில் மரங்களும், இன்னபிற மூலிகைகளும் கண்கொள்ளா காட்சிகளாகும். இதுதவிர இந்தப் பகுதிகளில் 7 வருடத்துக்கு ஒருமுறை தழைத்தோங்கும் குருஜி செடி மிகவும் பிரபலம்.

கருத்துகள் இல்லை