வீடுகட்டும் முன் - மனை உரிமையாளர் - கட்டுனர் இடையேயான ஒப்பந்தம்
* கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்னால், கட்டுனர் அல்லது கட்டிட காண்ட்ராக்டருடன் அதற்கான ஒப்பந்தம் நாம் செய்து கொள்வது முக்கியம்.
* கட்டிட ஒப்பந்தங்கள் பலவகையாக உள்ளன. கட்டிட ஒப்பந்தங்களுக்கிடையே அவற்றின் தன்மை மற்றும் அளவு என்பனவற்றில் பெருமளவுக்கு வேறுபாடுகள் காணப்பட்டாலும், எல்லா ஒப்பந்தங்களிலும் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி காண்போம்.
ஒப்பந்தத்தில் இடம் பெறுபவை :
* மொத்த பட்ஜெட் எவ்வளவு,
* கட்டிடத்தை கட்டுவதற்கான கால வரையறை எவ்வளவு நாட்கள் ஆகும்,
* கட்டுமான மூலப்பொருட்கள் எவ்வளவு ஆகும்.
* அதற்குண்டான செலவுகள் எவ்வளவு ஆகும்.
* ஒவ்வொருவருடையதும் பங்கு, கடமை என்ன என்பனவற்றைத் தெளிவாக வரையறுத்தல்.
* வேலையைத் தொடங்குவதற்கும் அதனை முடிப்பதற்குமான ஒத்துக்கொள்ளப்பட்ட கால அளவு எவ்வளவு.
* கட்டிடத்தை குறிக்கப்பட்ட குறிப்பிட்ட வேலைபாடுகளுடன் அமைக்க குறிப்பிட்ட தொகையொன்றுக்குக் கட்ட ஒப்புக்கொள்ளும் தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கும் இடையிலான உடன்படிக்கை என்பது போன்ற சகல விபரங்களுடன் கூடிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது முறையாகும்.
* கட்டிட ஒப்பந்தத்திற்கான பலவித ஒப்பந்த வடிவங்கள் உள்ளன. அவற்றுள் ஜேசிடி (JCT) எனப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் நியாயசபையின் (Joint Contracts Tribunal.) ஒப்பந்த வடிவம், FIDIC ஒப்பந்த வடிவம் என்பன அனைத்துலக அளவில் கைக்கொள்ளப்படுபவை ஆகும்.
* தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள், கட்டுமான பணிகள் முடிவடையவில்லை என்றால் அதற்காக காண்ட்ராக்டர் அல்லது கட்டுனருடைய பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் இரு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் 'அக்ரிமெண்டில்' விளக்கமாக குறிப்பிடும் பட்சத்தில் பல சிக்கல்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை