கன்னத்தில் சதை போட
3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.
முகம் இயல்பான நிலைக்கு வர
இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு நன்றாகக் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்.
மிருதுவாக
விளாம்பழத்தின் சதைப்பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சம அளவு கஸ்தூரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை எடுத்து அரைத்து, சோப்புக்கு பதிலாக குளிக்கும்போது இதைப் பயன்படுத்தலாம்.
இதனால் தோல் மிருதுவாவதுடன் கரும்புள்ளிகள் மறையும்.
சரும பிரச்சனை தீர
சுத்தமான குங்குமப்பூவில் ஒரு டீஸ்பூன் கசகசாவை சேர்த்து, பசும்பால் விட்டு அரைக்கவும்.
அதை முகம், நெற்றி, கழுத்துப் பகுதிகளில் பூசி வந்தால், சூரியக் கதிரால் பாதிக்கப்பட்டு கருமை படர்ந்த சருமம், மீண்டும் பழைய அழகைப் பெறும்.
அது மட்டுமில்லை, சருமத்தின் அழகைக் குலைக்கும் மரு, தழும்பு, பருவினால் கரும்புள்ளி போன்றவை கூட நாளடைவில் மறைந்துவிடும்.
கருத்துகள் இல்லை