அம்மை தழும்பு நீங்க
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.
வடு மறைய
சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள்.
15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள்.
இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.
மருக்கள் நீங்க
தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
கருத்துகள் இல்லை