பரு மறைய

                 லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.


முகப்பருக்கள் மறைய

                 பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும்.


                அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும்.


                 இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.


                 முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.


முகப்பருக்கள் நீங்க

                   எலுமிச்சை சாறு, தயிர் இரண்டையும் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு உப்பு கலந்து முகத்தில் தடவுங்கள்.


                   10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த குறிப்பை தவறாமல் செய்தால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாது. மென்மையாக முகம் மாறும்.


பருவினால் ஏற்படும் தழும்பு மறைய

                  தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழசாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.


பருக்கள் உதிர

                 புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.


                 பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

பரு மறைய | பருவினால் ஏற்படும் தழும்பு மறைய

பரு மறைய

                 லவங்கம் சிறந்த ஆன்டிசெப்டிக். ஒரேயொரு லவங்கத்தை எடுத்து, பால் சில சொட்டுகள் விட்டு, சுத்தமான கல்லில் தேய்த்து, அதிலிருந்து வரக்கூடிய பேஸ்ட்டை எடுத்து, முகத்தில் தேய்க்கும் போது எத்தகைய பருக்களும் காணாமல் போய்விடும்.


முகப்பருக்கள் மறைய

                 பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும்.


                அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும்.


                 இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.


                 முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.


முகப்பருக்கள் நீங்க

                   எலுமிச்சை சாறு, தயிர் இரண்டையும் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு உப்பு கலந்து முகத்தில் தடவுங்கள்.


                   10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த குறிப்பை தவறாமல் செய்தால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாது. மென்மையாக முகம் மாறும்.


பருவினால் ஏற்படும் தழும்பு மறைய

                  தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழசாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.


பருக்கள் உதிர

                 புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.


                 பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை