மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தய பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும்.
இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.
குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இள நரை மாற
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தால் இளநரை மறையும்.
பேன் தொல்லை நீங்க
வேப்பிலை, கருந்துளசி, நாயுருவி கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தைத் தடவினால் பேனும், ஈறும் காணாமல் போகும்.
இது போன்ற மேலும் பல அழகு குறிப்புகளை உங்களது மொபைலில் நீங்களும் பெற இங்கே கிளிக் செய்து நித்ரா அழகு குறிப்புகள் செயலியை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை