ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் நுனி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.
இந்த மாஸ்க் தலைமுடியில் விழும் சிக்கை போக்குவதோடு, தலைமுடி வறண்டு இருப்பதையும் தடுக்கும்.
வறட்சியைப் போக்க
தேங்காய்ப்பால், விளக்கெண்ணெயை சம அளவில் கலந்து அதனுடன் 5 முதல் 10 சொட்டு டீட்ரீ எண்ணெயையும் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு, ஷாம்பு போட்டு முடியை நன்றாக அலச வேண்டும்.
கூந்தல் வறட்சியின்றி இருக்க
ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சிறிது ஊற்றி, தலையை அலச வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியின்றி, பொலிவோடு காணப்படும்.
கருத்துகள் இல்லை