நம் வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. அதனை நாம் வாங்கி வளர்ப்பதற்கு கொஞ்சம் இடம் இருந்தாலே போதும், கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் மட்டுமே முதலில் வாங்கி வளர்க்கலாம். கீச் கீச் என்ற சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த பறவையின் சத்தம் மற்றும் அழகுக்காகவே இதனை அனைவரும் விரும்பி வாங்குவார்கள். இதனை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். இப்போது வளர்க்கும் முறைகளைப் பற்றி காண்போம்.

பறவைக் கூண்டுகள் :

                    * முதலில் கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விட வேண்டும். அப்போது தான் அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும்.

                   * பறவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். பிறகு தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து விடும்.

                   * கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு சற்று அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.

                   * பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது. லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இதன் மூலம் அதிகமான பறவைகளை குறுகிய காலத்தில் பெறலாம்.

உணவு முறைகள் :

                       லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணைகளை விரும்பி சாப்பிடும். பிறகு சீமைப்பொன்னாங்கன்னி கீரை தரலாம். முட்டைக்கோஸ், புருக்கோலி, போன்றவைகளை உணவாக தரலாம். கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

விற்பனை முறைகள் :

                     இதனை நாம் வீட்டில் அருகில் இருப்பவர்களுக்கும் அல்லது மொத்தமாகவும் கடைகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபம் பெறலாம்.

லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் முறைகள்

                     நம் வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. அதனை நாம் வாங்கி வளர்ப்பதற்கு கொஞ்சம் இடம் இருந்தாலே போதும், கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் மட்டுமே முதலில் வாங்கி வளர்க்கலாம். கீச் கீச் என்ற சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த பறவையின் சத்தம் மற்றும் அழகுக்காகவே இதனை அனைவரும் விரும்பி வாங்குவார்கள். இதனை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். இப்போது வளர்க்கும் முறைகளைப் பற்றி காண்போம்.

பறவைக் கூண்டுகள் :

                    * முதலில் கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விட வேண்டும். அப்போது தான் அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும்.

                   * பறவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். பிறகு தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து விடும்.

                   * கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு சற்று அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.

                   * பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது. லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இதன் மூலம் அதிகமான பறவைகளை குறுகிய காலத்தில் பெறலாம்.

உணவு முறைகள் :

                       லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணைகளை விரும்பி சாப்பிடும். பிறகு சீமைப்பொன்னாங்கன்னி கீரை தரலாம். முட்டைக்கோஸ், புருக்கோலி, போன்றவைகளை உணவாக தரலாம். கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

விற்பனை முறைகள் :

                     இதனை நாம் வீட்டில் அருகில் இருப்பவர்களுக்கும் அல்லது மொத்தமாகவும் கடைகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் அதிகமான லாபம் பெறலாம்.

கருத்துகள் இல்லை