நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம். தேங்காய் நார் கயிறுகள் கட்டிடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது.

                    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டிடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது. இப்போது இந்த தேங்காய் நார் கயிற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதை காண்போம்.

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்:

                                         * தேங்காய் நார்

                                         * தண்ணீர்

                                         * வில்லோயிங்

                                         * சில்வரிங்

                                         * ஸ்பின்னிங்

தயாரிக்கும் முறை :

                      * காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது.

                      * முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வில்லோயிங் எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் மட்டும் தனியே கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை சில்வரிங் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி.

விற்பனை செய்யும் முறை :

                      * நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். இதைத்தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர் இவர்களின் மூலம் மேலும் விற்பனையை அதிகரிக்கலாம்.

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு முறை

                     நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம். தேங்காய் நார் கயிறுகள் கட்டிடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது.

                    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டிடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது. இப்போது இந்த தேங்காய் நார் கயிற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதை காண்போம்.

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்:

                                         * தேங்காய் நார்

                                         * தண்ணீர்

                                         * வில்லோயிங்

                                         * சில்வரிங்

                                         * ஸ்பின்னிங்

தயாரிக்கும் முறை :

                      * காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது.

                      * முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வில்லோயிங் எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் மட்டும் தனியே கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை சில்வரிங் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி.

விற்பனை செய்யும் முறை :

                      * நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். இதைத்தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர் இவர்களின் மூலம் மேலும் விற்பனையை அதிகரிக்கலாம்.

கருத்துகள் இல்லை