பூசணிக்காயை மாடித்தோட்ட முறையில் பயிரிட முதலில் பந்தல் அமைக்க வேண்டும். மாடியின் நான்கு மூலைகளிலும் 4 சிமெண்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை அல்லது ஓரளவு திடமான குச்சிகளை எடுத்து ஆழமாக நட்டு வைக்க வேண்டும்.
* அந்த நான்கு குச்சிகளையும் இணைக்குமாறு நான்கு புறங்களிலும் கயிறு கம்பிகளை கட்டி விட வேண்டும். அதன் பின் குறுக்கு நெடுக்காக இரண்டு பக்கங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி பந்தல் அமைக்கலாம். அதன்பிறகு தொட்டிகளில் பூசணிக்காய் விதையை விதைத்து அவை வளர்ந்ததும் பந்தலில் படர விடலாம்.
கருத்துகள் இல்லை