கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு கிராமப்புறங்களில் இருந்துகொண்டு வேலைதேடி நகரங்களை நோக்கி அலைந்துகொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்தப் பழமொழியைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. கையில் பாலை வைத்துக்கொண்டு வேலைக்கு அலைந்த கதையாக. என்று! பால் விற்பனை என்பது லாபகரமான தொழில். ஆனால், அதில் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப் போகிறது என்று பலர் தயங்குகிறார்கள்.
* இந்தப் புள்ளிவிவரத்தைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள். இந்தியாவில் தனி நபர் ஒருவர் பயன்படுத்தும் பாலின் அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ல் இந்தியாவில் 105 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பால் உற்பத்தி 2.5 மில்லியன் டன் அதிகரித்து வருகிறது. 2021-22-ல் நாட்டில் பால் தேவை ஆண்டுக்கு 180 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேவையை ஈடுகட்ட தற்போதைய உற்பத்தியை இரு மடங்காக அதாவது ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன்னாக அதிகரிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.
* ஆக, தேவை இருக்கும் தொழிலில் இறங்குவதுதானே லாபம் தருவதாக இருக்கும். பால் வியாபாரத்தில் இறங்குவது என்றால் கறவை மாடுகளில் பாலைக் கறந்து கேனில் வைத்து வீடு வீடாக விற்பனை செய்யச் சொல்கிறீர்களா..?அப்படிச் செய்யும் பால்காரர்கள் ஆயிரம் பேர் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அடுத்தகட்டத்துக்குச் செல்லுங்கள். மொத்தமாக பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யுங்கள்.
* ஒரு நாளுக்கு பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை என்று இலக்கு வைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய முடிந்தால் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
* அடடா, இத்தனை லாபம் கொட்டும் தொழிலா இது. இதற்கு மூலதனம் என்ன தேவைப்படும்.?
* முதலில் மனிதர்கள்தான் இதற்கு மிகப்பெரிய மூலதனம். ஏனென்றால், உங்களுக்கு பால் விற்பனை செய்யும் ஆட்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் உத்தரவாதம் பெறவேண்டும். காரணம், அவர்கள் அதை வேறு ஒரு பக்கம் விற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களை உங்கள் பக்கம் திருப்புவதுதான் முதல் வேலை. அதற்கு நாலு மாடுகள் வைத்திருப்பவரை ஐந்தாவதாக ஒரு மாடு வாங்க வைத்து, அந்த மாட்டுப் பாலை எனக்குக் கொடுங்கள் என்று வளைக்க வேண்டும். அதன்பிறகு நம்முடைய அணுகுமுறையை வைத்து எல்லா பாலையும் நமக்கே விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்.
* அவர்கள் மாடு வாங்குவதற்கான கடனுக்கு வங்கியில் ஏற்பாடு செய்துகொடுப்பது. நீங்களே சிலரைத் திரட்டி குழுவாக வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து ஊருக்குள் சிறு பண்ணை அமைத்துக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தால் உங்கள் பால் கொள்முதலுக்கு நல்ல ஏற்பாடாக அமைந்துவிடும்.
* இந்தப் புள்ளிவிவரத்தைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள். இந்தியாவில் தனி நபர் ஒருவர் பயன்படுத்தும் பாலின் அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ல் இந்தியாவில் 105 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பால் உற்பத்தி 2.5 மில்லியன் டன் அதிகரித்து வருகிறது. 2021-22-ல் நாட்டில் பால் தேவை ஆண்டுக்கு 180 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேவையை ஈடுகட்ட தற்போதைய உற்பத்தியை இரு மடங்காக அதாவது ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன்னாக அதிகரிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.
* ஆக, தேவை இருக்கும் தொழிலில் இறங்குவதுதானே லாபம் தருவதாக இருக்கும். பால் வியாபாரத்தில் இறங்குவது என்றால் கறவை மாடுகளில் பாலைக் கறந்து கேனில் வைத்து வீடு வீடாக விற்பனை செய்யச் சொல்கிறீர்களா..?அப்படிச் செய்யும் பால்காரர்கள் ஆயிரம் பேர் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அடுத்தகட்டத்துக்குச் செல்லுங்கள். மொத்தமாக பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யுங்கள்.
* ஒரு நாளுக்கு பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை என்று இலக்கு வைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய முடிந்தால் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
* அடடா, இத்தனை லாபம் கொட்டும் தொழிலா இது. இதற்கு மூலதனம் என்ன தேவைப்படும்.?
* முதலில் மனிதர்கள்தான் இதற்கு மிகப்பெரிய மூலதனம். ஏனென்றால், உங்களுக்கு பால் விற்பனை செய்யும் ஆட்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் உத்தரவாதம் பெறவேண்டும். காரணம், அவர்கள் அதை வேறு ஒரு பக்கம் விற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களை உங்கள் பக்கம் திருப்புவதுதான் முதல் வேலை. அதற்கு நாலு மாடுகள் வைத்திருப்பவரை ஐந்தாவதாக ஒரு மாடு வாங்க வைத்து, அந்த மாட்டுப் பாலை எனக்குக் கொடுங்கள் என்று வளைக்க வேண்டும். அதன்பிறகு நம்முடைய அணுகுமுறையை வைத்து எல்லா பாலையும் நமக்கே விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்.
* அவர்கள் மாடு வாங்குவதற்கான கடனுக்கு வங்கியில் ஏற்பாடு செய்துகொடுப்பது. நீங்களே சிலரைத் திரட்டி குழுவாக வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து ஊருக்குள் சிறு பண்ணை அமைத்துக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தால் உங்கள் பால் கொள்முதலுக்கு நல்ல ஏற்பாடாக அமைந்துவிடும்.
Nice Content Brother 😊
பதிலளிநீக்கு