கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் அமைக்கப்பட்டது.
இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:
ஏழைப் பெண்கள் மற்றும் பெற்றோர்கள்.
இத்திட்டத்திற்கான தகுதி:
அ).கல்வித்தகுதி:
திட்டம் 1
* மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும்.
* தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
* பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.
திட்டம் 2
* பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
* பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ஆ) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000 - க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இ) திருமண தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் விதிமுறைகள்:
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இத்திட்ட உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:
திருமணத்திற்கு 40 நாட்களுக்குமுன் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை:
திட்டம் 1 – ரூ.25,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
திட்டம் 2 – ரூ.50,000 மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் நோக்கம்:
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கான தேவையான சான்றிதழ்கள்:
திட்டம் - 1
* பள்ளி மாற்றுச் சான்று நகல்
* பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்
திட்டம் - 2
* பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்று நகல்
* வருமானச் சான்று
* திருமண அழைப்பிதழ்
இத்திட்டத்தை பயன்படுத்த அணுக வேண்டிய அலுவலர்கள்:
* மாநகராட்சி ஆணையர்
* நகராட்சி ஆணையர்
* ஊராட்சி ஒன்றிய ஆணையர்
* மாவட்ட சமூகநல அலுவலர்கள்
* சமூகநல விரிவாக்க அலுவலர்கள்
* மகளிர் ஊரக நல அலுவலர்கள்
கருத்துகள் இல்லை