14, ஏப்ரல்,1937 இல் நடைமுறைக்கு வந்தது இச்சட்டம். ஆரம்பத்தில் முன்மேவுதிறன் (retrospective Effect) கொடுக்கப்படவில்லை. 1938 சட்ட திருத்தத்திற்குப்பின் 14, ஏப்ரல் முதல் முன்மேவுதிறன் கொடுக்கப்பட்டது. இச்சட்டப்படி, இறந்த கணவனின் சுயசம்பாத்திய சொத்திலும், பங்குரிமைச் சொத்திலும்(coparcenary) கைம்பெண்ணுக்கு உரிமை வழங்கப்பட்டது.
இந்த சட்டம் கிறிஸ்துவர், இஸ்லாமியர், பார்சி வகுப்பினருக்கு பொருந்தாது. அதே சமயத்தில் இந்து மதத்துடன் ஒத்து போகும் வீரசைவ, லிங்காயத்து, ஆர்ய சமூகம், பிராமணர் ஆகியவற்றுடன் பவுத்த, சமண, சீக்கிய வகுப்பினருக்கு பொருந்தும். இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பிரிவினையாகாத இந்து கூட்டு குடும்பத்தில் சொத்து பாகம் பிரிப்பதற்கு முன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு சேர வேண்டிய பங்கு சொத்து அவரின் விதவை மனைவிக்கு சேரும்.
இந்த உரிமை அடிப்படையில் பெறும் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதத்தில் மாற்றம் செய்து கொடுக்கவோ அதிகாரம் வழங்கப்பட வில்லை. மேலும் விதவை பெண் இறந்து விட்டால், அந்த சொத்து அவரது கணவரின் சகோதரருக்கு வாபஸ் கொடுக்கும் வகையில் இருந்தது.
கருத்துகள் இல்லை