2011 ஆம் ஆண்டின், மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண் பெண் விகிதாசாரம் 1000:940 ஆக உள்ளது.
பெண்களுக்கு எல்லா உரிமைகளை அரசாங்கம் தந்திருந்தாலும் நாட்டின் பல பகுதிகளில் பிறக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கபடுவது கவலைக்குரியதுதான்.பெண் சிசுக் கொலையை தடுக்கப் பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று
1. குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் (ஒழுங்குமுறை மற்றும் தடுப்பு) சட்டம், 1994
மரபணு அல்லது வளர்சிதை மாற்ற குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட பிறவி குறைபாடு அல்லது பாலியல் தொடர்புகோளாறுகள்
இது போன்ற தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இச்சட்டம் உதவும்.
இதைக்கொண்டு பிறக்கும் சிசுவின் பாலியலை கண்டு பிடித்து பெண் சிசுவைக் கர்ப்பத்திலேயே களைக்கும் கொடுமையை தடுப்பதே நோக்கம்.
மீறினால் அதிக பட்சமாக 3 ஆண்டு சிறையும்,100000 ரூபாய் அபராதமும் வழங்கப் படும்.
2. மருத்துவ முறையில் கர்ப்பத்தை அழிக்க வகை செய்யும் சட்டம் 1971/2002
12 முதல் 24 வார பெண்ணின் கர்ப்பத்தைபிறவிக் குறைபாடு போன்ற மருத்துவக் காரணங்களுக்காக அழிக்கலாம் என்ற விதியை மீறி பெண் சிசு வதை செய்ய இந்த முறையை துஷ்ப்ரயோகம் செய்வோரை தடுக்க இச்சட்டம் உதவும்.
அதே போல் கர்ப்பிணி பெண்களின் உயிரை மருத்துவ காரணங்களுக்காக காக்கவும் வழி வகுக்கிறது. இதன் வாயிலாக கருக்கலைப்பு செய்யும் உரிமை சட்ட ரீதியாக பெண்களுக்குத் தரப் படுகிறது.
கருத்துகள் இல்லை