தேவையான பொருட்கள் :
* கடலை மாவு கால் கப்
* மைதா மாவு1 கப்
* சோம்புஅரை டீஸ்பூன்
* மிளகாய் தூள்1 டீஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பு+hp பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை