தேவையான பொருட்கள் :
* கடலை மாவு அரை கப்
* அரிசி மாவு அரை கப்
* மிளகாய் தூள்கால் டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள்5 சிட்டிகை
* பூண்டு பல் 5
* சீரகம்1 டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு இவற்றை சிறிது நீரில் கரைக்கவும்.
பின் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், பூண்டு விழுது சேர்க்கவும்.
தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சேவ் அச்சிலோ அல்லது தேன் குழல் அச்சிலோ போட்டு பிழியவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்
கருத்துகள் இல்லை