* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : பொள்ளாச்சி
* முகவரி : பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
* தாலுகா : பொள்ளாச்சி
வரலாறு :
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசியப்பூங்கா ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது.
பூங்காவும் உய்வகமும் யுனெஸ்கோவினால் மேற்குத் தொடர்ச்சி மலை உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க ஆய்வில் உள்ளது. இந்த உய்வகமும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பழனி மலைகயும் சேர்ந்ததே ஆனைமலை சேமிப்புப் பகுதியாகும்.
இப்பூங்கா வனச்சரக அலுவலர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கோயம்புத்தூர் வட்ட வன பாதுகாவலர் மேற்பார்வையில் அமைந்துள்ளது.
கோவையிலிருந்து 40 கி. மீ தொலைவிலுள்ள பொள்ளாச்சியில் வனவிலங்கு வார்டன் அலுவலகத்தில் அனுமதி பெற்று அங்கிருந்து 35 கி. மீ தொலைவில் உள்ள டாப் ஸ்லிப் அல்லது 40 கி.மீ தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டை (அமராவதி கானகம்) அல்லது 65 கி. மீ தொலைவில் உள்ள வால்பாறை செல்லலாம்.
கருத்துகள் இல்லை