* மாவட்டம் : கிருஷ்ணகிரி
* இடம் : கிருஷ்ணகிரி
* முகவரி : கிருஷ்ணகிரி
* தாலுகா : கிருஷ்ணகிரி
வரலாறு :
கிருஷ்ணகிரி பகுதியானது கடும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள விவசாயிகள் மட்டுமே ஆற்று நீரை ஏற்றம் மூலம் எடுத்து தங்கள் வயல்களில் விவசாயம் செய்தனர். ஆனால் மற்ற விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இதனால் அப்போதைய காவேரிப்பட்டணம் சட்டமன்ற உறுப்பினரான சு. நாராஜ மணியகாரர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கை போதிய நிதி இல்லை என மறுக்கப்பட்டது. பின்னர் காமராசர் முதலமைச்சரான பிறகு அணை கட்ட சம்மதித்தார் என்றாலும் நிதிக்கு என்ன செய்வது என ராஜாஜியுடன் ஆலோசித்தபோது அவர் மத்திய அரசு வறட்சிக்காக நிதிவழங்கும் திட்டம் உள்ளது அந்த நிதியில் இருந்து அணையைக் கட்டலாம் என யோசனைத் தெரிவித்தார். அணை கட்டும்பணி 1955, சனவரி 3 இல் தொடங்கியது 1957, நவம்பர் 3 ஆம் தேதி பாசணத்துக்கு காமராசரால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை