* மாவட்டம் : திருநெல்வேலி

                 * இடம்    : சேரன்மகாதேவி


முகவரி  : 

               திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மிளகு பிள்ளையார் திருத்தலம் அமைந்துள்ளது.


தாலுகா: சேரன்மகாதேவி


வரலாறு  : 

               விவசாயங்களை காத்து அருளும் மிளகு பிள்ளையார் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.


தல வரலாறு :

                கேரள மன்னர் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டு கொண்டு இருந்தார். ஒருநாள் மன்னரின் கனவில், மாணிக்கக் கற்களைக் கொண்டு, ஒரு பொம்மை தயார் செய்து, அதனை ஒரு பிராமணனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டால், உன் வியாதி அந்த பிராமணனைச் சேர்ந்து விடும் என்று ஒரு தெய்வத்தின் குரல் கேட்டது. அதன்படியே பொம்மை செய்தார்.


                 ஆனால், எந்த பிராமணரும் அதை வாங்க முன்வரவில்லை. இதை கர்நாடகாவிலுள்ள பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டு வந்து, வாங்கிக் கொண்டான். பொம்மை பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் அது உயிர் பெற்றது.


               தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்துவிட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணி பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான். பல இடையூறுகளுக்கு பின் அகத்தியரை சந்தித்த போது, அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர். கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.


                 அகத்தியர் அவனிடம் தண்ணீர் தானமே தலை சிறந்தது. ஆகையால் 'மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் கால்வாயாக வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு அமைத்து, அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகாலும், பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும் படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.


                அகத்தியர் சொன்னது போலவே அனைத்தையும் செய்தான் அந்த பிராமண இளைஞன். பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்துவிட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி.


தல பெருமை :

                கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


                கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அதுதான் 'மிளகு பிள்ளையார்' கோவில் ஆகும்.


                 மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோவில் சுற்றுலா தலம்

                 * மாவட்டம் : திருநெல்வேலி

                 * இடம்    : சேரன்மகாதேவி


முகவரி  : 

               திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மிளகு பிள்ளையார் திருத்தலம் அமைந்துள்ளது.


தாலுகா: சேரன்மகாதேவி


வரலாறு  : 

               விவசாயங்களை காத்து அருளும் மிளகு பிள்ளையார் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.


தல வரலாறு :

                கேரள மன்னர் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டு கொண்டு இருந்தார். ஒருநாள் மன்னரின் கனவில், மாணிக்கக் கற்களைக் கொண்டு, ஒரு பொம்மை தயார் செய்து, அதனை ஒரு பிராமணனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டால், உன் வியாதி அந்த பிராமணனைச் சேர்ந்து விடும் என்று ஒரு தெய்வத்தின் குரல் கேட்டது. அதன்படியே பொம்மை செய்தார்.


                 ஆனால், எந்த பிராமணரும் அதை வாங்க முன்வரவில்லை. இதை கர்நாடகாவிலுள்ள பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டு வந்து, வாங்கிக் கொண்டான். பொம்மை பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் அது உயிர் பெற்றது.


               தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்துவிட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தம் செய்ய எண்ணி பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான். பல இடையூறுகளுக்கு பின் அகத்தியரை சந்தித்த போது, அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர். கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.


                 அகத்தியர் அவனிடம் தண்ணீர் தானமே தலை சிறந்தது. ஆகையால் 'மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் கால்வாயாக வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு அமைத்து, அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகாலும், பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும் படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.


                அகத்தியர் சொன்னது போலவே அனைத்தையும் செய்தான் அந்த பிராமண இளைஞன். பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்துவிட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி.


தல பெருமை :

                கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


                கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அதுதான் 'மிளகு பிள்ளையார்' கோவில் ஆகும்.


                 மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

கருத்துகள் இல்லை