* மாவட்டம் : திருப்பூர்

              * இடம்    : காங்கேயம்


முகவரி  : 

              காங்கேயத்திலிருந்து முத்தூர் செல்லும் வழியில் 7 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


தாலுகா: காங்கேயம்


வரலாறு  : 

               அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் கோவில், ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவன் தலம் இதுவாகும். இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம்.


தல வரலாறு :

               முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார்.


               அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறு.


தல பெருமை :

                பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்' என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்' என காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.


                 ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரகுபதி நாராயணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.


விபூதி மிதந்து வரும் அதிசயம் :

               கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி' என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது.


               சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 'குடம்' அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது 'சிறிய செம்பு' அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் சுற்றுலா தலம்

              * மாவட்டம் : திருப்பூர்

              * இடம்    : காங்கேயம்


முகவரி  : 

              காங்கேயத்திலிருந்து முத்தூர் செல்லும் வழியில் 7 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


தாலுகா: காங்கேயம்


வரலாறு  : 

               அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் கோவில், ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவன் தலம் இதுவாகும். இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம்.


தல வரலாறு :

               முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக அன்னைக்கு காட்சி கொடுத்தார்.


               அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறு.


தல பெருமை :

                பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்' என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்' என காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்.


                 ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரகுபதி நாராயணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.


விபூதி மிதந்து வரும் அதிசயம் :

               கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி' என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது.


               சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 'குடம்' அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது 'சிறிய செம்பு' அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கருத்துகள் இல்லை