பொதுவான தகவல்கள் - வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி
புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும்.
திட்ட அனுமதியை எங்கே வாங்குவது?
முதலில் வீட்டு மனையில் எவ்வளவு அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை தீர்மானித்த பிறகு, அதை வரைபடமாக மாற்றி, அந்த வரைபடத்திற்கு அனுமதி பெற வேண்டும். அதாவது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த வரைபடத்தைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். இந்தத் திட்ட வரைபடமானது முழுமையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் திட்ட அனுமதி கிடைக்கும்.
வீடு அல்லது வர்த்தக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை. இதை லே-அவுட் என்று சொல்வார்கள். இந்த லே-அவுட், சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி அவசியமா?
அந்த வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும். வீடு கட்ட அனுமதி கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகி விடும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது.
திட்டத்தில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. திட்டத்துக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை