பொதுவான தகவல்கள் - வீடு கட்ட விதிமுறைகள்

                 வீடு கட்ட மனை வாங்கியதும், அதில் வீடு கட்ட ப்ளானை தயார் செய்ய வேண்டும். அந்த ப்ளான் அரசு பரிந்துரைத்த விதிகளுக்கு கட்டுப்படுவதாக இருக்கவேண்டும். பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவு முழுவதும் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அரை கிரவுண்டு மனை வாங்கினாலும், அதல் முழுவதும் வீடு கட்ட முடியாது.


வீட்டின் நான்கு பக்கங்களிலும் இடம் விட வேண்டுமா?

                நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் சுற்றிலும் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவும், நகராட்சி என்றால் ஒரு குறிப்பிட்ட அளவும் வரைமுறையில் உள்ளன.


எவ்வளவு இடம் விட வேண்டும்?

                  மனையில் எவ்வளவு இடம் விட வேண்டும்என்பது மனையின் அளவை பொறுத்தது. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 60 அடி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும். வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும்.


எதற்காக இப்படி இடம் விட வேண்டும்?

                 எதற்காக இப்படி இடம் விட வேண்டும் என்றால், வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விட வேண்டும். மொத்தப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.


                 மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். இதுமட்டுமல்லாமல், மழைநீர் சேகரிப்பு தொட்டியும் கட்ட வேண்டும்.

வீடு கட்ட விதிமுறைகள் என்ன?

பொதுவான தகவல்கள் - வீடு கட்ட விதிமுறைகள்

                 வீடு கட்ட மனை வாங்கியதும், அதில் வீடு கட்ட ப்ளானை தயார் செய்ய வேண்டும். அந்த ப்ளான் அரசு பரிந்துரைத்த விதிகளுக்கு கட்டுப்படுவதாக இருக்கவேண்டும். பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவு முழுவதும் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அரை கிரவுண்டு மனை வாங்கினாலும், அதல் முழுவதும் வீடு கட்ட முடியாது.


வீட்டின் நான்கு பக்கங்களிலும் இடம் விட வேண்டுமா?

                நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் சுற்றிலும் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவும், நகராட்சி என்றால் ஒரு குறிப்பிட்ட அளவும் வரைமுறையில் உள்ளன.


எவ்வளவு இடம் விட வேண்டும்?

                  மனையில் எவ்வளவு இடம் விட வேண்டும்என்பது மனையின் அளவை பொறுத்தது. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 60 அடி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும். வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும்.


எதற்காக இப்படி இடம் விட வேண்டும்?

                 எதற்காக இப்படி இடம் விட வேண்டும் என்றால், வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விட வேண்டும். மொத்தப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.


                 மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். இதுமட்டுமல்லாமல், மழைநீர் சேகரிப்பு தொட்டியும் கட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை