வீடுகட்டும் முன் - என்.ஓ.சி (N.O.C. -No Objection Certificate)
* என்.ஓ.சி என்பது ஒரு சட்ட ஆவணம் ஆகும். நீங்கள் சட்ட ரீதியாக பெறவேண்டிய தடையின்மை சான்றிதழ் தான் என்.ஓ.சி. இது நீங்கள் வாங்கக் கூடிய நிலத்திற்கு கட்டாயம் பெற வேண்டிய ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
* வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி - ன் தேவை மற்றும் அதனின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்போம்.
* நீங்கள் வீட்டு மனை வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கான தடையில்லாச் சான்றிதழை நீங்கள் பெற வேண்டும்.
* உங்களது மனைக்கு அருகில் குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், நீங்கள் அந்த மனைக்கு பொதுப் பணித்துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* நீங்கள் வாங்கிய மனைக்கு 30 மீட்டர் தொலைவிற்குள் இரயில்வே இருப்புப் பாதை இருந்தால், இரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
* மேலும் மனைக்கு அருகில் குப்பைக் கிடங்கு இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
* உங்களது மனைக்கு 90 மீட்டர் தொலைவிற்குள் மயானப் பூமியோ இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் உங்களது மனை இருந்தால் நீங்கள் சுரங்கத்துறையிடம் கட்டாயம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
* விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
* இதை தவிர்த்து உங்களது மனைக்கு 30 ஆண்டுகளுக்கான வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும் தேவைப்படும்.
கருத்துகள் இல்லை