லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள் விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன் 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பிறகு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் ஷாம்பூவால் தலை முடியை தேய்த்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் முடி விரைவில் அடர்த்தியாகும்.
கூந்தல் அடர்த்தியாக வளர
செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
கூந்தல் வலுப்பெற, கருமையாக
பீட்ரூட் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்த்திடுங்கள்.
பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரம் கழித்து கழுவிடலாம்.
கூந்தல் நல்ல கருமையாக
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
கருத்துகள் இல்லை