முடி கொட்டும் பிரச்சனையைப் போக்க 50 கிராம் விளாம் மர இலை, 100 கிராம் சுருள் பட்டை, 2 டீஸ்பூன் வெந்தயம், 10 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தினந்தோறும் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடி முடி வரை படும்படி தடவி வந்தால் முடி கொட்டுவது நிற்பதுடன், கருகருவென வளர தொடங்கும்.
முடி செழித்து வளர
முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
முடி கருகருவென்று இருக்க
பெரிய நெல்லிக்காயை இடித்து கொள்ளுங்கள். பிறகு சுத்தமான நல்லெண்ணெய் அரை லிட்டரும், தேங்காய் எண்ணெய் கால் லிட்டரும் கலந்து, இடித்த நெல்லிக்காயை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வடிகட்டித் தலைக்குத் தேய்த்தால், முடி கருகருவென்று இருக்கும்.
முடி வளர
சிறிதளவு செம்பருத்திப் பூவைச் சேகரித்து, நன்கு கசக்கிச் சாறு எடுத்து, சொட்டை உள்ள இடத்தில் அந்த சாற்றைத் தடவி வந்தால் நாளடைவில் முடி வளரும்.
கருத்துகள் இல்லை