இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                    * பெண்கள் அனைவரும்.


உடல் எடை பரிசோதனை செய்வதற்கான கால இடைவெளி:

                * 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

                * 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

                * 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒரு வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.


பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை:

              * முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.


              * உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.


              * கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக்கூடிய கேள்வியே கேட்கப்படும்.


              * அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதை அறிந்து அதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும்.


             * வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.


              * மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


                * மருத்துவமனைக்கு நீங்கள் பரிசோதனைக்கு செல்லும்போதே சிறுநீர், மலம் போன்றவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.


பரிசோதனைக்கு முன் செய்ய வேண்டியவை:

                 * இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழ வேண்டும்.


                 * காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


                 * வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.


பரிசோதனை செய்ய வேண்டிய பகுதிகள்:

                 * இரத்தம்

                 * இரத்த அழுத்தம்

                 * இரத்தத்தில் கொழுப்பின் அளவுகள்

                 * சிறுநீர்

                 * மலம்

                 * எக்ஸ்ரே

                 * இ.சி.ஜி

                 * உயரம்

                 * எடை

                 * இடை அளவு

                 * வயிற்று ஸ்கேன்

                 * சர்க்கரை நோய்

                 * கல்லீரல் பரிசோதனை

                 * சிறுநீரகப் பரிசோதனை

                 * கண்

                 * காது

                 * தோல்

                 * சிடி ஸ்கேன்

                 * எம்.ஆர்.ஐ.ஸ்கேன்

                 * மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை

                 * பேப் பரிசோதனைகள்

                 * மேம்மோகிராம்


பரிசோதனை செய்யப்படும் இடங்கள்:

                   அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் ரூ.250 ஐ செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

பெண்களுக்கான உடல் எடை பரிசோதனை திட்டம்

இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                    * பெண்கள் அனைவரும்.


உடல் எடை பரிசோதனை செய்வதற்கான கால இடைவெளி:

                * 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

                * 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

                * 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒரு வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.


பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை:

              * முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.


              * உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.


              * கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக்கூடிய கேள்வியே கேட்கப்படும்.


              * அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதை அறிந்து அதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும்.


             * வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.


              * மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


                * மருத்துவமனைக்கு நீங்கள் பரிசோதனைக்கு செல்லும்போதே சிறுநீர், மலம் போன்றவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.


பரிசோதனைக்கு முன் செய்ய வேண்டியவை:

                 * இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழ வேண்டும்.


                 * காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


                 * வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.


பரிசோதனை செய்ய வேண்டிய பகுதிகள்:

                 * இரத்தம்

                 * இரத்த அழுத்தம்

                 * இரத்தத்தில் கொழுப்பின் அளவுகள்

                 * சிறுநீர்

                 * மலம்

                 * எக்ஸ்ரே

                 * இ.சி.ஜி

                 * உயரம்

                 * எடை

                 * இடை அளவு

                 * வயிற்று ஸ்கேன்

                 * சர்க்கரை நோய்

                 * கல்லீரல் பரிசோதனை

                 * சிறுநீரகப் பரிசோதனை

                 * கண்

                 * காது

                 * தோல்

                 * சிடி ஸ்கேன்

                 * எம்.ஆர்.ஐ.ஸ்கேன்

                 * மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை

                 * பேப் பரிசோதனைகள்

                 * மேம்மோகிராம்


பரிசோதனை செய்யப்படும் இடங்கள்:

                   அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் ரூ.250 ஐ செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை