மத்திய, மாநில அரசாங்கங்களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்களின் முன்னேற்றத்தை மனதில்கொண்டு தொழில்கடன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலுகைகளையும் முன்னுரிமைகளையும் பொதுத் துறை வங்கிகளில் பெற்று பயனடையவே பெண்களுக்கான வங்கிக்கடன் திட்டம் அமைக்கப்பட்டது.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                          21 - 45 வயதுள்ள பெண்கள்.


இத்திட்டத்திற்கான தகுதி:

                         21 - 45 வயது வரம்புள்ள பெண்கள்.


புதிய தொழில் முனைவோர்களுக்கு...!

                புதிதாகத் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு புதிய தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற பெண்கள் 21 - 45 வயது வரம்பில் இருக்க வேண்டும்.


                இத்திட்டத்தில் 50 சதவிகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


                இத்திட்டத்தில் கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை வழங்கப்படும்.


                தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும்.


வேலையில்லாதவர்களுக்கு..!

                 வேலையில்லா பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.3 லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படும்.


பெண்களுக்கான கடன் திட்டங்கள்!

                 பெண்களின் முன்னேற்றத்துக்காகவே சமீபத்தில் தொடங்கப்பட்ட வங்கி பாரதிய மஹிளா வங்கி. பெண்களுக்கென இந்த வங்கி அளிக்கும் நான்கு திட்டங்கள்:


                * இதில் பி.எம்.பி அன்னபூர்ணா லோன் திட்டம், தனிப்பட்ட பெண்கள் மற்றும் குழுவாகச் சேர்ந்து இயங்கும் பெண்களுக்கானது. இதில் சிறிய உணவகம் ஆரம்பிக்க ரூ.5,000 முதல் 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.


                * சமையலறையை நவீனமாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார்டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது. இதில் குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ.50,000மும் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.


                * காப்பகங்களை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படுகிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.


                * பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வரையில் வழங்கப்படும். அதேசமயம் கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான வங்கிக்கடன்

                 மத்திய, மாநில அரசாங்கங்களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்களின் முன்னேற்றத்தை மனதில்கொண்டு தொழில்கடன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலுகைகளையும் முன்னுரிமைகளையும் பொதுத் துறை வங்கிகளில் பெற்று பயனடையவே பெண்களுக்கான வங்கிக்கடன் திட்டம் அமைக்கப்பட்டது.


இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:

                          21 - 45 வயதுள்ள பெண்கள்.


இத்திட்டத்திற்கான தகுதி:

                         21 - 45 வயது வரம்புள்ள பெண்கள்.


புதிய தொழில் முனைவோர்களுக்கு...!

                புதிதாகத் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு புதிய தொழில்முனைவோர் அபிவிருத்தித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற பெண்கள் 21 - 45 வயது வரம்பில் இருக்க வேண்டும்.


                இத்திட்டத்தில் 50 சதவிகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


                இத்திட்டத்தில் கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை வழங்கப்படும்.


                தொழில் தொடங்குபவர்கள் தங்கள் பங்காக 5 சதவிகித பணத்தைத் தரவேண்டும்.


வேலையில்லாதவர்களுக்கு..!

                 வேலையில்லா பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த வாய்ப்புகளுக்கு ரூ.3 லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படும்.


பெண்களுக்கான கடன் திட்டங்கள்!

                 பெண்களின் முன்னேற்றத்துக்காகவே சமீபத்தில் தொடங்கப்பட்ட வங்கி பாரதிய மஹிளா வங்கி. பெண்களுக்கென இந்த வங்கி அளிக்கும் நான்கு திட்டங்கள்:


                * இதில் பி.எம்.பி அன்னபூர்ணா லோன் திட்டம், தனிப்பட்ட பெண்கள் மற்றும் குழுவாகச் சேர்ந்து இயங்கும் பெண்களுக்கானது. இதில் சிறிய உணவகம் ஆரம்பிக்க ரூ.5,000 முதல் 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.


                * சமையலறையை நவீனமாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார்டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது. இதில் குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ.50,000மும் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.


                * காப்பகங்களை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படுகிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.


                * பியூட்டி பார்லர்கள், சலூன்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கடன் தொகை ரூ.50,000. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வரையில் வழங்கப்படும். அதேசமயம் கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை