ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்தவும் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் அமைக்கப்பட்டது.
இத்திட்டத்தினால் பயன் பெறுவோர்:
ஆதிதிராவிடர் / பழங்குடியின கல்வி பயிலும் பெண்குழந்தைகள்.
இத்திட்டத்தின் பயன்:
3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்படும்.
6 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவியர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.
இத்திட்டத்தை நடைமுறைபடுத்தும் மாவட்டங்கள்:
* தருமபுரி
* கிருஷ்ணகிரி
* திருவண்ணாமலை
* கடலூர்
* விழுப்புரம்
* விருதுநகர்
* காஞ்சிபுரம்
* திருவள்ளூர்
* வேலூர்
* சேலம்
* நாமக்கல்
* திருச்சிராப்பள்ளி
* பெரம்பலூர்
* கரூர்
* நாகப்பட்டினம்
கருத்துகள் இல்லை