ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:
ஏழை, எளிய பெண்கள்
இத்திட்டத்தின் நோக்கம்:
* குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல்
* பெண் சிசு வதையை ஒழித்தல்
* ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல்
* பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல்.
இத்திட்டத்தின் செயல்முறை:
* குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.
* குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத்தொகை வழங்கப்படும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆண் குழந்தை இருத்தல் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
ஒரு பெண் குழந்தை எனில் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
பயனடையும் குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கான உரிய சான்றிதழ்கள்:
* குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்
* வருமானச்சான்று
* இருப்பிடச்சான்று
* கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று
* சாதிச்சான்று
* பெற்றோரின் வயதுச்சான்று
* ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று
* குடும்ப அட்டையின் நகல்
* குடும்ப புகைப்படம்
வைப்புத்தொகை வழங்கப்படுவதற்கான கால அளவு:
நிலை வைப்புத் தொகையின் 20-ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கு அணுக வேண்டிய அலுவலர்கள்:
* மாவட்ட சமூகநல அலுவலர்
* மாவட்ட திட்ட அலுவலர்கள் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்)
* குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள்
கருத்துகள் இல்லை