* மரத்தின் பெயர் : எலுமிச்சை மரம்

            * தாவரவியல் பெயர் : சிட்ரஸ் லிமன்

            * ஆங்கில பெயர் : Lemon tree

            * தாயகம் : ஆசியா

            * மண் வகை : வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : ரூட்டேசியே


பொதுப்பண்புகள் :

             * எலுமிச்சை மரம் 3-6 மீ உயரத்தை அடைந்து பொதுவாக கிளையில் கூர்மையான கூர்முனைகளைக் கொண்டுள்ளது.


             * இலைகள் பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய நீள்வட்டமாக, 6-11.5 செ.மீட்டர் நீண்டு உள்ளது.


             * ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை பெறலாம்.


             * பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.


             * இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.


            * எலுமிச்சைக்கு குறைந்தபட்சமாக 7° செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது, எனவே இவை மிதமான பருவநிலையில் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் முதிர்ச்சியடைந்த நிலையில் இவை கடினமாகி விடுகின்றன.


             * வளரும்போது குறைக்கப்பட வேண்டிய கிளைகளை வெட்டி குறைக்கப்படுகிறது. மிக அதிகமான கிளைகள் புதராக வளரும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கோடை முழுவதும், மிகவும் தீவிரமான வளர்ச்சியடைகிறது.


பயன்கள் :

            * சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.


           * எலிமிச்சம் பழம் ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன.


           * நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.


           * எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.


           * தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.


           * ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.


           * எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


           * எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.


           * தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சைப் பழச்சாறை சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.


வளர்ப்பு முறைகள் :

            * டிசம்பர் - பிப்ரவரி, ஜூன் - செப்டம்பர் நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.


            * சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் பி.கே.எம். -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், பிரமாலினி ராஸ்ராஜ், வி.ஆர்.எம் 1 ஆகிய இரங்கள் ஆகும்.


            * நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களிலும் களிமண் இல்லாத மணல் பாங்கான நிலங்களிலும் எழுமிச்சை செழிப்பாக வளரும்.


            * நிலத்தை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் 20 அடி இடைவெளியில் 3 அடி அழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் எடுக்க வேண்டும் . ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிரப்பி, ஒரு வாரம் ஆறப் போட வேண்டும்.


            * பதியன் செடி அல்லது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 - 120 செடிகள் தேவைப்படும்.


           * 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை நடவு செய்யும்போது குழியின் மையத்தில் ஒரு அடி அழத்தில் நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க ஒவ்வெரு செடியின் அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.


          * நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணிர் விட வேண்டும். அதற்கு பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தல் போதுமானது.


           * எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு அடி இடைவெளி விட்டு அரையடி விட்டதில் வட்டப்பாத்தி எடுத்து 2 கிலோ ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.


          * செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பாதுகாக்க வேண்டும். களையின் வளர்ச்சியை பொறுத்து களை எடுக்க வேண்டும். நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட கரும்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் பொது அறுவடை செய்ய வேண்டும்.


நோய் தடுக்கும் முறைகள் :

               * வெள்ளை ஈயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * அசுவினி பூச்சிக்கு கற்பூர கரைசலையும் தெளித்து விடலாம்.


               * குருத்துத் துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * தண்டுத் துளைப்பான் பூச்சியை கட்டுபடுத்த புழு தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * நூற்புழு பூச்சியை கட்டுபடுத்த நூற்புழு பாதித்த மரத்தை ஜீவாமிர்த கரைசலைக் கொண்டு தெளித்து விடுவதன் மூலம் சரிசெய்யலாம்.


               * எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மோனோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு கரைசல் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

            * மரத்தின் பெயர் : எலுமிச்சை மரம்

            * தாவரவியல் பெயர் : சிட்ரஸ் லிமன்

            * ஆங்கில பெயர் : Lemon tree

            * தாயகம் : ஆசியா

            * மண் வகை : வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : ரூட்டேசியே


பொதுப்பண்புகள் :

             * எலுமிச்சை மரம் 3-6 மீ உயரத்தை அடைந்து பொதுவாக கிளையில் கூர்மையான கூர்முனைகளைக் கொண்டுள்ளது.


             * இலைகள் பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய நீள்வட்டமாக, 6-11.5 செ.மீட்டர் நீண்டு உள்ளது.


             * ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை பெறலாம்.


             * பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.


             * இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.


            * எலுமிச்சைக்கு குறைந்தபட்சமாக 7° செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது, எனவே இவை மிதமான பருவநிலையில் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் முதிர்ச்சியடைந்த நிலையில் இவை கடினமாகி விடுகின்றன.


             * வளரும்போது குறைக்கப்பட வேண்டிய கிளைகளை வெட்டி குறைக்கப்படுகிறது. மிக அதிகமான கிளைகள் புதராக வளரும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கோடை முழுவதும், மிகவும் தீவிரமான வளர்ச்சியடைகிறது.


பயன்கள் :

            * சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.


           * எலிமிச்சம் பழம் ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன.


           * நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.


           * எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.


           * தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.


           * ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.


           * எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


           * எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.


           * தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சைப் பழச்சாறை சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.


வளர்ப்பு முறைகள் :

            * டிசம்பர் - பிப்ரவரி, ஜூன் - செப்டம்பர் நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.


            * சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் பி.கே.எம். -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், பிரமாலினி ராஸ்ராஜ், வி.ஆர்.எம் 1 ஆகிய இரங்கள் ஆகும்.


            * நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களிலும் களிமண் இல்லாத மணல் பாங்கான நிலங்களிலும் எழுமிச்சை செழிப்பாக வளரும்.


            * நிலத்தை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் 20 அடி இடைவெளியில் 3 அடி அழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் எடுக்க வேண்டும் . ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிரப்பி, ஒரு வாரம் ஆறப் போட வேண்டும்.


            * பதியன் செடி அல்லது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 - 120 செடிகள் தேவைப்படும்.


           * 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை நடவு செய்யும்போது குழியின் மையத்தில் ஒரு அடி அழத்தில் நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க ஒவ்வெரு செடியின் அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.


          * நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணிர் விட வேண்டும். அதற்கு பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தல் போதுமானது.


           * எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு அடி இடைவெளி விட்டு அரையடி விட்டதில் வட்டப்பாத்தி எடுத்து 2 கிலோ ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.


          * செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பாதுகாக்க வேண்டும். களையின் வளர்ச்சியை பொறுத்து களை எடுக்க வேண்டும். நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட கரும்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் பொது அறுவடை செய்ய வேண்டும்.


நோய் தடுக்கும் முறைகள் :

               * வெள்ளை ஈயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * அசுவினி பூச்சிக்கு கற்பூர கரைசலையும் தெளித்து விடலாம்.


               * குருத்துத் துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * தண்டுத் துளைப்பான் பூச்சியை கட்டுபடுத்த புழு தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து விடலாம்.


               * நூற்புழு பூச்சியை கட்டுபடுத்த நூற்புழு பாதித்த மரத்தை ஜீவாமிர்த கரைசலைக் கொண்டு தெளித்து விடுவதன் மூலம் சரிசெய்யலாம்.


               * எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மோனோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு கரைசல் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை