தேவையான பொருட்கள் :
* கேழ்வரகு மாவு2 கப்
* பெரிய வெங்காயம்2
* பச்சை மிளகாய்4
* முருங்கைக் கீரைகால் கப்
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
பச்சை மிளகாயையும், பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு கடாயில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும், பெரிய வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். அதோடு மாவைக் கொட்டி சிறிது தண்ணீர; ஊற்றி கட்டி இல்லாமல் கிளற வேண்டும். பின் அதோடு முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவேண்டும்.
ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு, எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவேண்டும். கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவேண்டும்.
சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவேண்டும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி.
கருத்துகள் இல்லை