* மாவட்டம் : கோயம்புத்தூர்

               * இடம்    : கிணத்துக்கடவு

               * முகவரி  : கிணத்துக்கடவு, கோயமுத்தூர்.

               * தாலுகா    : கிணத்துக்கடவு


வரலாறு  : 

              அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில், கோயமுத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு என்ற ஊரில் அழகும் அருளும் நிறைந்த முருகனாக அருள்பாலிக்கிறார்.


தல வரலாறு :

               முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக கீழே இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலை என்றாகி விட்டது.


               ஒருமுறை இந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்' என்றார்.


               இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார்.


               இதன்பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன்பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


தல சிறப்பு :

             வள்ளி-தெய்வானையுடன் உற்சவராகவும் அருள்கிறார் முருகப்பெருமான். மேலும், வெள்ளியங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சன்னதிகளும் இங்குள்ளது.


             கோவிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் கண்டு பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.


             அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப்பெருமான் முத்துமலையிலும் தனதாக்கி அருள்பாலிக்கிறார்.


             தைப்பூசத் திருநாளில் வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும்.


பிரார்த்தனை :

              குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பக்தர்கள் முருகனை வழிபட்டு பலனடைகிறார்கள். நினைத்த காரியங்கள் நடக்கிறது என்றும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கிறது என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.


             பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


இருப்பிடம் :

               கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு உள்ளது. அங்கிருந்து மேற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ள முத்துக்கவுண்டனூரில் திருத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில் சுற்றுலா தலம்

               * மாவட்டம் : கோயம்புத்தூர்

               * இடம்    : கிணத்துக்கடவு

               * முகவரி  : கிணத்துக்கடவு, கோயமுத்தூர்.

               * தாலுகா    : கிணத்துக்கடவு


வரலாறு  : 

              அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில், கோயமுத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு என்ற ஊரில் அழகும் அருளும் நிறைந்த முருகனாக அருள்பாலிக்கிறார்.


தல வரலாறு :

               முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக கீழே இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலை என்றாகி விட்டது.


               ஒருமுறை இந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்' என்றார்.


               இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக் கண்டு பரவசமடைந்தார்.


               இதன்பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன்பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


தல சிறப்பு :

             வள்ளி-தெய்வானையுடன் உற்சவராகவும் அருள்கிறார் முருகப்பெருமான். மேலும், வெள்ளியங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சன்னதிகளும் இங்குள்ளது.


             கோவிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் கண்டு பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.


             அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப்பெருமான் முத்துமலையிலும் தனதாக்கி அருள்பாலிக்கிறார்.


             தைப்பூசத் திருநாளில் வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும்.


பிரார்த்தனை :

              குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பக்தர்கள் முருகனை வழிபட்டு பலனடைகிறார்கள். நினைத்த காரியங்கள் நடக்கிறது என்றும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கிறது என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.


             பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


இருப்பிடம் :

               கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு உள்ளது. அங்கிருந்து மேற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ள முத்துக்கவுண்டனூரில் திருத்தலம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை