* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : நாங்குநேரி
* முகவரி : நாங்குநேரி, திருநெல்வேலி.
* தாலுகா : நாங்குநேரி
வரலாறு :
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பட்டு உடுத்தியது போல காட்சி அளிக்கும் செங்கல் தேரி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுக்காவில் களக்காடு புலிகள் காப்பகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.
இங்கு கால் பதித்ததுமே நம் உடம்பிற்கும், உள்ளத்திற்கும் குளுமை தரும் தென்றலின் குளிர்ச்சியை வேறு எங்கும் அனுபவிக்க முடியாது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட அழகு மிளிரும் பங்களா இன்றும் கூட உயிர்ப்புடன் இருக்கிறது. இது பாதுகாப்பாக தங்கி ஓய்வெடுக்க சிறந்த இடம்.
ஓங்கி உயர்ந்து அடர்த்தியாக நிற்கும் மரக்கூட்டங்கள், காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய நீரோடைகள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே சொல்லலாம்.
மரத்தாலான விடுதி மற்றும் மிருகங்களைப் பார்க்க பார்வை மாடங்கள் ஆங்காங்கே கண்டு ரசிக்க அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலே உள்ள மலையில் இருந்து பச்சையாறு உற்பத்தியாகி வருகிறது.
சிறப்புகள் :
* குளுமை தரும் தென்றல்...
* அழகு மிளிரும் பங்களா...
* அடர்த்தியாக நிற்கும் மரக்கூட்டங்கள்...
* கண்களுக்கு விருந்தளிக்கும் அழகிய நீரோடைகள்...
* ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்...
* மரத்தாலான விடுதி...
* பார்வை மாடங்கள்...
எப்படி அடையலாம்?
திருநெல்வேலியில் உள்ள களக்காட்டிலிருந்து மேற்கே 18 கி.மீ. தொலைவில் இயற்கை எழில்மிகு செங்கல் தேரி அமைந்துள்ளது.
அற்புதமான செங்கல் தேரி, இயற்கை தாலாட்டும் சொர்க்கபுரி என்றால் அது மிகையாகாது !!
கருத்துகள் இல்லை