* மாவட்டம் : பெரம்பலூர்
* இடம் : பச்சைமலை
* முகவரி : பச்சைமலை, பெரம்பலூர்.
* தாலுகா : வேப்பந்தட்டை
வரலாறு :
இயற்கை எழில் வாய்ந்த கோரையாறு நீர்வீழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பச்சைமலை மீது அமைந்துள்ளது.
30 அடி உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த 60 அடி ஆழம் கொண்ட குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுவதை கண்டால் உள்ளமே கொள்ளை போகும்.
இந்த நீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.
சிறப்புகள் :
* அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைந்த அருவி....
* குளுமையான தட்ப வெப்பநிலை...
* அடர்ந்த பசுமையான மலைகள்...
* பச்சை பசேலென்று புல்வெளிகள்...
* கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை மாறா காடுகள்...
* கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளம்...
எப்படி செல்வது?
கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை