வீடுகட்டிய பின் - வீடு கட்டியபின் பெயிண்ட் செய்யும் முறைகள்?
* வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சுவர் பூச்சு மற்றும் மேல்தள அமைப்பு ஆகியவற்றுக்கு ஒயிட் சிமெண்ட் போன்றவற்றால் பெயிண்ட் அடிக்கலாம். அதன்காரணமாக சுவரில் உள்ள சிறு துளைகள் அடைபட்டு விடும். பிறகு அதற்கு மேலாக எமல்ஷன் பிரைமர் இரண்டு முறைகள் அடிப்பது சிறப்பு.
* ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரீ-பெயிண்டிங் செய்வதோடு, எக்ஸ்டீரியர் எமல்ஷன் ஒரு கோட் அடிப்பது கட்டிடத்தின் ஆயுளை அதிகமாக்கும்.
* முதல் தளத்தில் அமைக்கப்படும் பாத்ரூம் சுவர்களில் கட்டாயமாக நீர்த்தடுப்பு பூச்சு செய்ய வேண்டும். இதனால் நீர்க்கசிவு பாதிப்புகள் தளத்தை பாதிக்காது.
* இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுவர்களில் விரிசல்கள் உள்ளதா..? என்று கவனிக்க வேண்டும். விரிசல்கள் இருப்பின் அவற்றை அக்ரிலிக் கிராக் பில்லர் கொண்டு தக்க முறையில் பட்டி பார்த்து, பெயிண்ட் அடித்து விடலாம்.
* பாத்ரூம் டைல்ஸ் ஜாயின்ட்களில் சாதாரண ஜாயின்ட் பவுடர் மூலம் பேக்கிங் செய்யாமல் எபாக்சி ஜாயின்ட் பில்லர் மூலம் பேக்கிங் செய்வதுதான் சிறப்பானது.
* பழைய கட்டிடத்தின் இணைப்பாக புதிய கட்டிடம் கட்டும்போது பொதுவாக உண்டாகும் ஜாயின்ட் விரிசல்கள் வராமல் தடுக்க வாட்டர் ப்ரூப் கெமிக்கல்களை பயன்படுத்தலாம். விரிசல்கள் ஏற்கனவே இருந்தால் சீலண்ட் கொண்டு பூசி அடைக்கலாம்.
* கட்டிடத்தின் மேல் தளத்தில் பதிக்கப்பட்ட ஓடுகளின் ஜாயின்ட்கள் சரிவர அடைக்கப்பட்டுள்ளதா..? என்று மழைக்கு முன்னதாகவே பார்ப்பது அவசியம். சுவர்களில் பெயிண்டிங் செய்யும் போது ஓடுகளின் மேல் வாட்டர் புரூப் எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யலாம்.
* வடிகால் நீர்க்குழாய்கள் 125 அடி அல்லது 150 அடிகளுக்கு ஒன்று என்ற அளவில் அமைப்பது நல்லது.
* ஜன்னல் மற்றும் கதவு நிலைச்சட்டங்களில் ஏற்படும் விரிசல்களை சரி செய்ய சிலிகான் சீலண்ட் கொண்டு அடைக்கலாம்.
* மேல்நிலை நீர்த்தொட்டியில் நீர்க்கசிவு இருப்பின் வாட்டர் ப்ரூப் கோட்டிங் தருவதன் மூலமாக சரி செய்யலாம்.
கருத்துகள் இல்லை