பொதுவான தகவல்கள் - மனை வாங்கும்முன் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்
இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டும் கனவு எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. இந்த கனவில் வீட்டின் அளவு மட்டுமே மாறுபடுகிறது. கஷ்டப்பட்டு வீட்டு மனையை வாங்கலாம் என்றால், அதை எப்படி சரிபார்த்து வாங்குவது என்று பலர் குழம்புகின்றன. வீட்டு மனை வாங்கும்போது என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேன்டும் என்பதை இங்கு காண்போம்.
சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்
* உரிமையாளாரின் அசல் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதாவது வாங்கப்போகும் மனையின் கடந்த 30 வருடங்களுக்கு மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.
* நில அளவைப் படங்கள் (Field Measurement Book FMB) சரிபார்த்தல் அவசியம்.
* நில உபயோக வரைபடத்தை (Land Use Maps) ஆன்லைன் மூலம் சரிபார்க்க வேண்டும்.
* தற்போதைய விற்பனையாளரின் பெயரில் பட்டா உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்தப் பட்டாவை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.
* நிலம் அங்கீகரிக்கப்பட்ட மனையில் உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்த்தல் அவசியம்.
* அங்கீகரிக்கப்பட்ட மனையின் நிபந்தனை ஏதேனும் இருந்தால் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
* மனை வாங்கும் முன் அந்த மனையின் மீது அரசாங்கத்திடமிருந்து கட்டுபாடுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மனை வாங்கும் முன் அந்த மனையின் மீது ஏதாவது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி நிலுவையில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
* நில உரிமையாளாரின் பெயரில் நில வரி செலுத்தப்படுகிறதா என்று சரிபார்த்தல் மிக அவசியம்.
* வாங்கும் மனையின்மீது உயர் மின்னழுத்தக் கடத்திக் கம்பிகள் எதுவும் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
* மனையின் ஆவணங்களைச் சரிபார்க்க, மனை எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தின் வரம்புக்குள் வருகிறதோ, அந்த அலுவலகத்திலிருந்து மனை தொடர்பான சமீபத்திய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று, ஒரிஜினல் ஆவணங்களுடன் பொருத்தி சரிபார்க்கவும்.
* ஒரு வேளை நில உரிமையாளர் பவர் பத்திரம் மூலம் முகவருக்குச் சில அதிகாரம் வழங்கியிருந்தால் அந்த அதிகாரம் நிலுவையில் உள்ளதா மற்றும் முதன்மையாளர் (நில உரிமையாளர்) உயிருடன்தான் உள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து விற்பனையாளர் நகல் ஆவணப் பத்திரம் (Copy Document)) விண்ணப்பித்துப் பெற வேண்டும். மேலும் அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளர் ஆவணத்துடன் சரிபார்க்க வேண்டும். இவ்வாறாகச் செய்தால் மட்டுமே விற்பனையாளாரின் பத்திரத்தின் அசல் தன்மையை உறுதி செய்ய முடியும்.
* நிலங்களின் அளவீடு பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது போல் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
* நிலத்தின் வழிகாட்டு மதிப்பு (Guidline Value) என்னவென்று பத்திரப் பதிவு இணையதளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்புக்கு முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை