பொதுவான தகவல்கள் - கழிவுநீரை மறு சுத்திகரிப்பு செய்யும் முறைகள்

                  பொதுவாக வீடுகளில் பாத்திரம் தேய்க்க, குளிக்க பயன்படுத்திய தண்ணீர் வீணாகத்தான் போகிறது. அதை அப்படியே செடி கொடிகளுக்கு விட்டால், அதில் இருக்கும் வேதிப்பொருட்களால் செடிகள் நன்றாக வளருவதில்லை. இப்படி வீணாவதி தடுக்க, நாம் அதை சுத்திகரித்து செடிகளுக்கு விடலாம்.


சுத்திகரிப்பு முறை

                 * மூன்றடி நீளம், மூன்றடி அகலம், மூன்றடி ஆழம் கொண்ட ஒரு சிமெண்டு தொட்டியை தோட்டத்தில் அமைக்க வேண்டும்.


                 * வீட்டின் கழிவு நீர் மொத்தமாக அதற்குள் வந்து சேர்வதாக குழாய் அமைப்புகளை பொருத்தியிருக்க வேண்டும். அந்த குழியின் கீழ்புறமாக நீர் வடிந்து வெளியில் வர ஒரு துளை இருக்க வேண்டும்.


                 * அந்த தொட்டிக்குள் கழிவு நீரை விடுவதற்கு முன்பு அதற்குள் மணல் மற்றும் ஒன்றரை அங்குல கருங்கல் ஜல்லி ஆகியவற்றை தொட்டியின் பாதியளவுக்கு நிரப்பி விட வேண்டும்.


                 * பாதியளவு மணலும் ஜல்லியும் போடப்பட்ட தொட்டிக்குள் கல்வாழை மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற செடி வகைகளை நட்டு வளர்க்க வேண்டும்.


                 * கச்சிதமாக சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கழிவு நீரை பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் இல்லாமல் செடி கொடிகள் நன்றாக வளரும்.


                 * அந்த ஜல்லியிலும் மணலிலும் நாளாக நாளாக ஒரு வகை பாசிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும்.


                 * அந்த பாசியில் உள்ள பாக்டீரியாக்கள் குளியலறை மற்றும் சமையலறையிலிருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள பாஸ்பேட் போன்ற உப்புக்களை சாப்பிட்டு வளரக்கூடியவையாகும்.


                 * கல்வாழை மற்றும் சேப்பக்கிழங்கு செடிகளின் வேர்கள் சுத்தமான நீரை தொட்டிக்கு கீழே செல்ல உதவும்.


                 * கழிவுநீர் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் அது நல்ல நீராக மாறி கீழேயுள்ள துளையின் வழியாக வெளியில் வரத்துவங்கும்.


                 * சுத்தமான அந்த நீரை செடி கொடிகளுக்கு பாய்ச்சினால் அவை, சுகாதாரமாக நல்ல முறையில் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறு சுத்திகரிப்பு செய்யும் முறைகள்

பொதுவான தகவல்கள் - கழிவுநீரை மறு சுத்திகரிப்பு செய்யும் முறைகள்

                  பொதுவாக வீடுகளில் பாத்திரம் தேய்க்க, குளிக்க பயன்படுத்திய தண்ணீர் வீணாகத்தான் போகிறது. அதை அப்படியே செடி கொடிகளுக்கு விட்டால், அதில் இருக்கும் வேதிப்பொருட்களால் செடிகள் நன்றாக வளருவதில்லை. இப்படி வீணாவதி தடுக்க, நாம் அதை சுத்திகரித்து செடிகளுக்கு விடலாம்.


சுத்திகரிப்பு முறை

                 * மூன்றடி நீளம், மூன்றடி அகலம், மூன்றடி ஆழம் கொண்ட ஒரு சிமெண்டு தொட்டியை தோட்டத்தில் அமைக்க வேண்டும்.


                 * வீட்டின் கழிவு நீர் மொத்தமாக அதற்குள் வந்து சேர்வதாக குழாய் அமைப்புகளை பொருத்தியிருக்க வேண்டும். அந்த குழியின் கீழ்புறமாக நீர் வடிந்து வெளியில் வர ஒரு துளை இருக்க வேண்டும்.


                 * அந்த தொட்டிக்குள் கழிவு நீரை விடுவதற்கு முன்பு அதற்குள் மணல் மற்றும் ஒன்றரை அங்குல கருங்கல் ஜல்லி ஆகியவற்றை தொட்டியின் பாதியளவுக்கு நிரப்பி விட வேண்டும்.


                 * பாதியளவு மணலும் ஜல்லியும் போடப்பட்ட தொட்டிக்குள் கல்வாழை மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற செடி வகைகளை நட்டு வளர்க்க வேண்டும்.


                 * கச்சிதமாக சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கழிவு நீரை பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் இல்லாமல் செடி கொடிகள் நன்றாக வளரும்.


                 * அந்த ஜல்லியிலும் மணலிலும் நாளாக நாளாக ஒரு வகை பாசிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும்.


                 * அந்த பாசியில் உள்ள பாக்டீரியாக்கள் குளியலறை மற்றும் சமையலறையிலிருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள பாஸ்பேட் போன்ற உப்புக்களை சாப்பிட்டு வளரக்கூடியவையாகும்.


                 * கல்வாழை மற்றும் சேப்பக்கிழங்கு செடிகளின் வேர்கள் சுத்தமான நீரை தொட்டிக்கு கீழே செல்ல உதவும்.


                 * கழிவுநீர் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் அது நல்ல நீராக மாறி கீழேயுள்ள துளையின் வழியாக வெளியில் வரத்துவங்கும்.


                 * சுத்தமான அந்த நீரை செடி கொடிகளுக்கு பாய்ச்சினால் அவை, சுகாதாரமாக நல்ல முறையில் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

கருத்துகள் இல்லை