உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்க
ஓட்ஸ் - 1 ஸ்பூன், தேன் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், ஓட்ஸ் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.
பருக்களில் சீழ் பிடிக்காது
மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களில் சீழ் பிடிக்காது.
வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.
சீழ் நிறைந்த பருக்கள் மறைய
முகம் ஈரப்பசையுடன் இருக்க
கடலை மாவை கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, நீரில் கழுவுங்கள்.
இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகம் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கும்.
கருத்துகள் இல்லை