கருமை நீங்க
கடலை மாவு - 1/2 டீஸ்பூன், முல்தானி மெட்டி - 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், சருமம் அழகாகவும் கருமை நீங்கியும் காணப்படும்.
கருமை மறைய
ஆரஞ்சு சாற்றை மட்டும் ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவினால் போதும். முகத்தில் உள்ள கருமை மறைந்து, ஒரே மாதிரியான சீரான நிறத்தைத் தரும். மூக்கின் மேல் வரும் வெள்ளை, கருப்பு புள்ளிகளைச் சரிப்படுத்தும்.
முக கருமை நீங்க
ஒரு மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும்.
இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.
இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.
கருமையான தழும்புகள் நீங்க
பூண்டிற்கு தழும்புகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஒரு துண்டு பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் கருமையான தழும்புகள் நீங்கும்.
கருமை நிறம் மாற
மஞ்சளை நன்கு அரைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் சருமத்தின் கருமையை போக்கலாம்.
கருத்துகள் இல்லை